Search This Blog

Tuesday, April 30, 2019

மே தினம்

மே தினம்

முட்டையிலிருந்து
கோழியா இல்லை
கோழியில் இருந்து
முட்டையா ?

இவ்வாறே தான்
முதலாளிக்கும்
தொழிலாளிக்கும்
உண்டான தொடர்பு.

முதலீடு செய்வதனாலேயே
உழைப்பாளிகள் பிழைப்பர்
உழைக்கும் வர்க்கத்தாலேயே
முதலாளிகளும் இருப்பர்.

முனைந்து உதவி செய்ய
தொழிலாளிகள் மகிழ்வர்
இணைந்து பணி செய்திட
முதலாளிகள் பயனுறுவர்.

ஒருவரின்றி மற்றவரில்லை
ஒத்துப் போக சச்சரவில்லை
ஒரே குடும்பமாய் இயங்கிடவே
ஊரில் நிம்மதி தழைத்திடுமே.

கலகம் செய்வோரை இனங்கண்டு
களையெடுத்து அகற்ற வேண்டும்
வீடும் நாடும் செழித்து இருந்திடவே
ஒற்றுமையாய் இருத்தல் வேண்டும்.

மே தின வாழ்த்துக்களுடன்...

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
01.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...