உலக சகோதர தினம்
சகோதரனாகப் பிறந்தவன்
எப்பவும் தன் சம்சாரத்துடன்
சுமூகமாகவே இருப்பான்.
அவர்கள் படும் வலி தெரியும்
அனுசரித்து செல்லக் கூடிய
வழியும் தெரியும்.
இரண்டாவது தந்தையாக
இல்லத்தை வழி நடத்தும்
ஆண்மகனும் இவனே.
உடன் பிறந்த சகோதரன்
உடனிருந்தால் ஒவ்வொரு
பெண்ணும் மஹாராணியே.
ஒவ்வொரு ஆண் நண்பனும்
சகோதரனாகவேப் பழகினால்
அப்பெண்ணிற்கு பாதுகாப்பே.
அண்ணனோடு பிறந்த தம்பி
தம்பியோடு பிறந்த அண்ணன்
முதலில் நண்பர்களே ஆவர்.
தம்பி உடையான் படைக்கஞ்சான்
அண்ணன் உடையான் எதற்குமே
அஞ்சான்.
உலக சகோதர தினத்திற்காக
எழுதிய வரிகள் .....
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.05.2019
No comments:
Post a Comment