குடும்பத் தலைவி
கையில் வளையலணிந்து
கால் வெள்ளி கொலுசோடு
கருங்கூந்தல் பின்னலிட்டு
காதில் ஜிமிக்கியும் போட்டு
நேர் வகிடெடுத்து நன்றாய்
நெற்றி நிறைய குங்குமமும்
மேனியெங்கும் மஞ்சள் பூசி
தழைய தழைய சேலை கட்டி
ரெட்டைவட மூக்குத்தியுடன்
மல்லிச்சரம் மணக்கச் சூடி
நீர்த் தெளித்து கோலமிட்டு
சுத்தமாக வீட்டைப் பேணி
வாய்க்கு ருசியாக அறுசுவை
உணவையும் சமைத்து விட்டு
குழந்தைகளை வளர்த்து கூட
கணவனையும் உபசரித்து
வயர் கூடை கை வேலையென
சின்னதாக தையுலும் கற்று
பகலிரவென அயராது அவள்
பம்பரமாய் இயங்கிடுவாள்
கண்ணுக்கு இமை போல
காலமெல்லாம் காத்திடுவாள்.
சும்மா ஒரு அதீத கற்பனையே 😎
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.05.2019
No comments:
Post a Comment