Search This Blog

Tuesday, May 28, 2019

குடும்பத் தலைவி

குடும்பத் தலைவி

கையில் வளையலணிந்து
கால் வெள்ளி கொலுசோடு
கருங்கூந்தல் பின்னலிட்டு
காதில் ஜிமிக்கியும் போட்டு
நேர் வகிடெடுத்து நன்றாய்
நெற்றி நிறைய குங்குமமும்
மேனியெங்கும் மஞ்சள் பூசி
தழைய தழைய சேலை கட்டி
ரெட்டைவட மூக்குத்தியுடன்
மல்லிச்சரம்  மணக்கச் சூடி
நீர்த் தெளித்து கோலமிட்டு
சுத்தமாக வீட்டைப் பேணி
வாய்க்கு ருசியாக அறுசுவை
உணவையும் சமைத்து விட்டு
குழந்தைகளை வளர்த்து கூட
கணவனையும் உபசரித்து
வயர் கூடை கை வேலையென
சின்னதாக தையுலும் கற்று
பகலிரவென அயராது அவள்
பம்பரமாய் இயங்கிடுவாள்
கண்ணுக்கு இமை போல
காலமெல்லாம் காத்திடுவாள்.

சும்மா ஒரு அதீத கற்பனையே 😎

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...