Search This Blog

Thursday, May 30, 2019

புகையிலை ஒழிப்பு தினம்

புகையிலை ஒழிப்பு தினம்

புகையை உள்ளிழுத்து
நுரையீரலுக்குள் நிரப்பி
மூக்காலும் வாயாலும்
வெளித் தள்ளுவர்.

கண்ணிமை மூடி கச்சிதமாய்
இரு விரல் இடுக்கில் செருகி
வாய்க்குள் வைத்தெடுத்து
புகை விடுவர்.

தானும் சீரழிந்து தனது
பக்கத்திலும் புகை விட்டு
சுற்று வட்டாரத்தை இவர்
நாசம் செய்வர்.

நெருப்புத் துண்டு இழுப்போர்
தனக்கே கொள்ளி வைப்பதை
எந்நாள் உணர்வரோ அந் நாள்
அவரது நன்னாளாகும்.

புகையிலையின் பிள்ளைகள்
பெயர் உருவம் பலவும் பெற்று
பாக்கெட்டில் அடைபட்டு இவர்
பாக்கெட்டில் அமர்ந்திருக்கும்.

மிக அதிக வரியும் விதிக்கனும்
மோசமான நிலை உணர்த்தனும்
பொது இடங்களில் புகைப்போரை
கண்டதும் கைது செய்யனும்.

புகையிலையில்லா புவி வேண்டும்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
31.05.2019

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...