வேண்டாமே....
காணாத கண்ணிற்கு
கவிதையும் வேண்டாம்
கேட்காத காதிற்கு நற்
பாடலும் வேண்டாம்
அழையாத இடத்திலே
நுழையவும் வேண்டாம்
அன்பில்லா உறவோடு
குழையவும் வேண்டாம்
மதியாத மாந்தரோடு
உறவிட வேண்டாம்
மாறத புன்னகையை
இழக்கவும் வேண்டாம்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.05.2019
No comments:
Post a Comment