Search This Blog

Wednesday, May 1, 2019

வேண்டாமே....

வேண்டாமே....

காணாத கண்ணிற்கு
கவிதையும் வேண்டாம்
கேட்காத காதிற்கு நற்
பாடலும் வேண்டாம்

அழையாத இடத்திலே
நுழையவும் வேண்டாம்
அன்பில்லா உறவோடு
குழையவும் வேண்டாம்

மதியாத மாந்தரோடு
உறவிட வேண்டாம்
மாறத புன்னகையை
இழக்கவும் வேண்டாம்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
01.05.2019


No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...