பிரதோஷம்
பித்தனாய் உனைப் பாட
பெருமானே அருள் புரிவாய்
பக்தனாய் அடி பணிய
பரமசிவனே அருள் புரிவாய்
நித்தமும் சரணடைய
நீலகண்டா அருள் புரிவாய்
நியமத்துடன் பூசிக்கவே
நமச்சிவாயா அருள் புரிவாய்
உருகி உருகி உனைத் துதிக்க
உமாபதியே அருள் புரிவாய்
உள்ளத்தை ஒப்படைத்தேன்
ஓங்காரமே அருள் புரிவாய்
சர்வமும் நீயே என்று
சபாபதியே சரணடைவன்
சங்கடங்கள் தீர்த்து வைத்து
சர்வேஸ்வரா ஆட்கொள்வாய்
நடராஜா நடராஜா வென
நாமஞ்சொல்லி தொழுதிடுவேன்
நாயன்மாராய் எனை நினைத்து
நின் திருவடியில் இருத்திடுவாய்
திருச்சிற்றம்பலம் 🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வி. பாலா
02.05.2019
No comments:
Post a Comment