சபாபதியே உனை
சேவிப்பதெப்போது !!
சிவகாம சுந்தரா நின்
திருவடியை தரிசிக்க
சிதம்பரம் வர எமக்கு
சீக்கிரமருள வேணும்.
சித்திரை மாதத்திலே
சித்ஸபையில் அபிஷேகம்
ஆனி மாதத்திலே உனக்கு
ராஜசபையில் அபிஷேகம்.
அகங் குளிர தரிசிக்கும்
அந்நாளை எதிர்நோக்கி
ஆனந்த தாண்டவா என்
அகத்துளே தியானிப்பேன்.
அனுதினம் நினைந்துருகி
ஐந்தெழுத்தை உச்சரித்து
உமா மஹேஸ்வரா நான்
உன்னை சரணடைவேன்.
குஞ்சித பாதத்தை எமது
கண்ணாலே கண்டிடவே
கருனை புரிய வேண்டும்
கொரோனா தீர வேண்டும்.
கீழ கோபுரம் வழியாக
கோவிலுக்குள் நுழைந்து
ஆயிரங்கால் மண்டபத்தை
அமைதியாய் கடந்திடனும்.
இருபத்தோரு வாயிலின்
இருபுறமும் இறங்கியதும்
மாம்பழ விநாயகரை நமது
மனமுருக வேண்டிடனும்.
இடபுறமாய் திரும்பிச் செல்ல
கொடி மரத்தின் அருகினிலே
நெடுஞ்சாண்கிடை வீழ்ந்து
நேராக சென்றிடனும்.
சித்ஸபை ஜொலிஜொலிக்க
சிவகாமசுந்தரி உடனிருக்க
இராஜாதி ராஜனாக நம்மை
நடராஜ ராஜன் ஈர்த்திடுவான்.
தில்லைவாழ் அந்தணர்கள்
தினந்தோரும் ஆராதிக்க
தேவாதி தேவன் நமக்கு
திருவடியை காட்டிடுவான்.
ஆறு கால பூஜைகளை
அனுதினமும் ஏற்றபடி
அடியவர்களை காத்திடவே
அம்மையப்பனருளிடுவான்.
அர்த்த ஜாம பூஜையினை
ஐயா யாம் காண வேண்டும்
ஆனித் திருமஞ்சனத்தை
ஐயமின்றி அருள வேண்டும்.
நடராஜா நடராஜா 🙏🙏
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
17.05.2020
No comments:
Post a Comment