சபாபதியே உனை
சேவிப்பதெப்போது !!
பக்தர்களைக் காணாத
பரமேஸ்வரா இன்னும்
பாராமுகம் ஏனய்யா
விஸ்வேஸ்வரா ?
ஊரடங்கு நீட்டிப்பாகுது
உமா மஹேஸ்வரா உன்
தரிசனம் தானெப்போது
லோகேஸ்வரா ?
நின் பொற்பாதம் தரிசிக்க
ஏங்கிக் கிடக்கிறோம் நிதம்
நமச்சிவாய நாமஞ் சொல்லி
நெக்குருகிறோம்.
சித்ஸபையில் குடிகொண்ட
நடராஜனே சகல ரோகமும் நிவர்த்தி செய்தருள்வாய்
சுந்தரனே.
அழகான சுந்தரியை
பாராது போனாலே
அவளழகுக்கு என்றுமே
மேன்மையில்லை.
அந்தணர்கள் துதித்தாலும்
அடியார்கள் காணாவிடில்
ஆலயத்துள் உனக்கென்றும்
சக்தியில்லை.
கொரானாவை களைந்திடு
கொடுநோய்களை விரட்டிடு
உலக மக்கள் யாவர்க்கும்
உய்யும் வழியை நல்கிடு.
நடராஜா நடராஜா 🙏🙏
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
18.05.2020
Search This Blog
Thursday, May 21, 2020
Subscribe to:
Post Comments (Atom)
Most Viewed
-
மாமன் மகள் உன்னையே நிதம் நினைத்த உணர்வுகளை உதறிவிட்டு ஊரை விட்டு சென்றாயே உனக்கு இது அழகாகுமோ.. உறவு எனும் ஒற்றைச் சொல்லில் ஒட்டு மொத்...
-
அபி குட்டி தஞ்சையிலே பிறந்த தங்க கட்டியே தரணியை ஆள வந்த தாமரை கொடியே.. கணேசனுக்கு கிட்டிய கட்டி கரும்பே, எங்கள் சிட்டி தம்பிக்கு ...
-
ஊர் கூடி தேர் இழுத்தல் தனித்து செய்ய இயலா பொது காரியங்களை பலரையும் ஒன்று கூட்டி முடிப்பது வழக்கம். இலாப நஷ்டம் பாராமல் சுய விருப்பு வெ...
என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது
நடராஜர் கவிதைகள்
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment