Search This Blog

Thursday, May 21, 2020

சபாபதியே

சபாபதியே உனை
சேவிப்பதெப்போது !!

பக்தர்களைக் காணாத
பரமேஸ்வரா இன்னும்
பாராமுகம் ஏனய்யா
விஸ்வேஸ்வரா ?

ஊரடங்கு நீட்டிப்பாகுது
உமா மஹேஸ்வரா உன்
தரிசனம் தானெப்போது
லோகேஸ்வரா ?

நின் பொற்பாதம் தரிசிக்க
ஏங்கிக் கிடக்கிறோம் நிதம்
நமச்சிவாய நாமஞ் சொல்லி
நெக்குருகிறோம்.

சித்ஸபையில் குடிகொண்ட
நடராஜனே சகல ரோகமும் நிவர்த்தி செய்தருள்வாய்
சுந்தரனே.

அழகான சுந்தரியை
பாராது போனாலே
அவளழகுக்கு என்றுமே
மேன்மையில்லை.

அந்தணர்கள் துதித்தாலும்
அடியார்கள் காணாவிடில்
ஆலயத்துள் உனக்கென்றும்
சக்தியில்லை.

கொரானாவை களைந்திடு
கொடுநோய்களை விரட்டிடு
உலக மக்கள் யாவர்க்கும்
உய்யும் வழியை நல்கிடு.

நடராஜா நடராஜா 🙏🙏

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
18.05.2020








No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...