Search This Blog

Thursday, May 21, 2020

கொரோனா

கொரோனா

வீட்டிலிருந்தபடியே
வேலையென்றதும்
முதலில் மகிழ்ச்சியாய்
இருந்தது.

நினைத்தபோது
எழுந்திடவும் மேலும்
நினைத்ததை உடுத்தவும் முடிந்தது.

ஆரம்ப காலங்களில்
சவுகரியமாயிருந்தாலும்
போகப் போக பெருஞ்
சுமையாயானது.

காலை முதல் இரவு வரை
இடையறாத அழைப்புகள்
இதற்கு நடுநடுவே பலப்பல
விவாதங்கள்.

இணையத்தின் வாயிலாக
எல்லோருடனும் இணைப்பு
என் இல்லத்து உறவினிலோ விடுபட்டது பிணைப்பு.

எதையோ இழந்த மாதிரி
எப்போதும் நானிருப்பதாக
என்னவள் கூறி வருவதும்
வழக்கமாய்ப் போனது.

மடிக் கணினி முன்பாக
முப்போதும் கிடப்பதால்
உணவின் ருசியைக் கூட
உணர முடிவதில்லை.

ஓடாத வாகனங்கள்
பழுதடைவதைப் போல
வெளியில் செல்லாத
மனிதனுக்கும் பாதிப்பே.

கொரோனாவே நீ
ஒழிந்திடும் நாளே
அனைவர்க்கும்
பொன்னாளாகும்.

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
21.05.2020





No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...