கொரோனா
வீட்டிலிருந்தபடியே
வேலையென்றதும்
முதலில் மகிழ்ச்சியாய்
இருந்தது.
நினைத்தபோது
எழுந்திடவும் மேலும்
நினைத்ததை உடுத்தவும் முடிந்தது.
ஆரம்ப காலங்களில்
சவுகரியமாயிருந்தாலும்
போகப் போக பெருஞ்
சுமையாயானது.
காலை முதல் இரவு வரை
இடையறாத அழைப்புகள்
இதற்கு நடுநடுவே பலப்பல
விவாதங்கள்.
இணையத்தின் வாயிலாக
எல்லோருடனும் இணைப்பு
என் இல்லத்து உறவினிலோ விடுபட்டது பிணைப்பு.
எதையோ இழந்த மாதிரி
எப்போதும் நானிருப்பதாக
என்னவள் கூறி வருவதும்
வழக்கமாய்ப் போனது.
மடிக் கணினி முன்பாக
முப்போதும் கிடப்பதால்
உணவின் ருசியைக் கூட
உணர முடிவதில்லை.
ஓடாத வாகனங்கள்
பழுதடைவதைப் போல
வெளியில் செல்லாத
மனிதனுக்கும் பாதிப்பே.
கொரோனாவே நீ
ஒழிந்திடும் நாளே
அனைவர்க்கும்
பொன்னாளாகும்.
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
21.05.2020
Search This Blog
Thursday, May 21, 2020
Subscribe to:
Post Comments (Atom)
Most Viewed
-
மாமன் மகள் உன்னையே நிதம் நினைத்த உணர்வுகளை உதறிவிட்டு ஊரை விட்டு சென்றாயே உனக்கு இது அழகாகுமோ.. உறவு எனும் ஒற்றைச் சொல்லில் ஒட்டு மொத்...
-
அபி குட்டி தஞ்சையிலே பிறந்த தங்க கட்டியே தரணியை ஆள வந்த தாமரை கொடியே.. கணேசனுக்கு கிட்டிய கட்டி கரும்பே, எங்கள் சிட்டி தம்பிக்கு ...
-
ஊர் கூடி தேர் இழுத்தல் தனித்து செய்ய இயலா பொது காரியங்களை பலரையும் ஒன்று கூட்டி முடிப்பது வழக்கம். இலாப நஷ்டம் பாராமல் சுய விருப்பு வெ...
என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது
நடராஜர் கவிதைகள்
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment