சபாபதியே உனை சேவிப்பதெப்போது !!!
திருமஞ்சன வைபவமும்
திருவாதிரை உற்சவமும்
ஆண்டாண்டு காலமாய்
நடக்குது.
நான்மாட வீதியிலே
மூலவரே உற்சவராய்
பவனி வரும் பேரழகும்
சிறக்குது.
திருத்தேரின் மீதமர்ந்து
தில்லை மாநகர்தனிலே
அம்மையோடு அப்பனும்
உலவுவான்.
இராஜாதி இராஜனாக
வீதியுலா வந்து அவன்
குடிமக்கள் குறைதீர்த்து
அருளுவான்.
வேட்டுச்சத்தம் விண்ணதிர
ஆயிரங்கால் மண்டபத்தில்
சிவகாமியோடு சிருங்கார
நடனமாம்.
மேன்மையான சைவ நீதி
உலகெலாம் சிறக்க வேண்டி
சிற்றம்பலம் துணையிருக்க
வேணுமாம்.
நடராஜா நடராஜா 🙏🙏
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
19.05.2020
Search This Blog
Thursday, May 21, 2020
Subscribe to:
Post Comments (Atom)
Most Viewed
-
மாமன் மகள் உன்னையே நிதம் நினைத்த உணர்வுகளை உதறிவிட்டு ஊரை விட்டு சென்றாயே உனக்கு இது அழகாகுமோ.. உறவு எனும் ஒற்றைச் சொல்லில் ஒட்டு மொத்...
-
அபி குட்டி தஞ்சையிலே பிறந்த தங்க கட்டியே தரணியை ஆள வந்த தாமரை கொடியே.. கணேசனுக்கு கிட்டிய கட்டி கரும்பே, எங்கள் சிட்டி தம்பிக்கு ...
-
ஊர் கூடி தேர் இழுத்தல் தனித்து செய்ய இயலா பொது காரியங்களை பலரையும் ஒன்று கூட்டி முடிப்பது வழக்கம். இலாப நஷ்டம் பாராமல் சுய விருப்பு வெ...
என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது
நடராஜர் கவிதைகள்
எனது தகப்பனார் ஸ்வர்கீய ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...
No comments:
Post a Comment