Search This Blog

Thursday, May 21, 2020

சபாபதியே

சபாபதியே உனை சேவிப்பதெப்போது !!!

திருமஞ்சன வைபவமும்
திருவாதிரை உற்சவமும்
ஆண்டாண்டு காலமாய்
நடக்குது.

நான்மாட வீதியிலே
மூலவரே உற்சவராய்
பவனி வரும் பேரழகும்
சிறக்குது.

திருத்தேரின் மீதமர்ந்து
தில்லை மாநகர்தனிலே
அம்மையோடு அப்பனும்
உலவுவான்.

இராஜாதி இராஜனாக
வீதியுலா வந்து அவன்
குடிமக்கள் குறைதீர்த்து
அருளுவான்.

வேட்டுச்சத்தம் விண்ணதிர
ஆயிரங்கால் மண்டபத்தில்
சிவகாமியோடு சிருங்கார
நடனமாம்.

மேன்மையான சைவ நீதி
உலகெலாம் சிறக்க வேண்டி
சிற்றம்பலம் துணையிருக்க
வேணுமாம்.

நடராஜா நடராஜா 🙏🙏

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
19.05.2020







No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...