Search This Blog

Friday, February 25, 2022

வைகுண்ட ஏகாதசி

 வைகுண்ட ஏகாதசி 


மகேசன் வரம் பெற்று

மாளாது இன்னல் தந்த

அசுரர்களை வதைத்திட

எடுத்த அவதாரமே.. 


மந்தார மலை கடந்து

கலசத்தில் வெளி வந்த

அமிர்தத்தை பகிர்ந்திட்ட

மோகினி உருவமே. 


மச்சமாய் கூர்மமாய்

வராக நரசிம்ஹமாய்

வாமன பரசுராம ராம

பலராம கண்ணனே.. 


மண்ணுலக மாந்தரை

ரக்ஷிக்க வேண்டியே

வையத்துள் பிறக்கும்

வைகுண்ட வாசன் நீ.. 


காண்டீபனுக்கு அன்று

கீதையும் உபதேசித்தாய்

பார்த்தசாரதியாய் போர் 

நடுவிலும் நின்றாய்.. 


அதர்மத்தை அழித்திட

அவதாரமும் எடுப்பாய்

தர்மத்தைக் காத்திட நற்

பாதையும் வகுப்பாய்.. 


ஸர்வம் 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 


அன்பன் சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

13.01.2022








No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...