வைகுண்ட ஏகாதசி
மகேசன் வரம் பெற்று
மாளாது இன்னல் தந்த
அசுரர்களை வதைத்திட
எடுத்த அவதாரமே..
மந்தார மலை கடந்து
கலசத்தில் வெளி வந்த
அமிர்தத்தை பகிர்ந்திட்ட
மோகினி உருவமே.
மச்சமாய் கூர்மமாய்
வராக நரசிம்ஹமாய்
வாமன பரசுராம ராம
பலராம கண்ணனே..
மண்ணுலக மாந்தரை
ரக்ஷிக்க வேண்டியே
வையத்துள் பிறக்கும்
வைகுண்ட வாசன் நீ..
காண்டீபனுக்கு அன்று
கீதையும் உபதேசித்தாய்
பார்த்தசாரதியாய் போர்
நடுவிலும் நின்றாய்..
அதர்மத்தை அழித்திட
அவதாரமும் எடுப்பாய்
தர்மத்தைக் காத்திட நற்
பாதையும் வகுப்பாய்..
ஸர்வம்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
அன்பன் சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
13.01.2022
No comments:
Post a Comment