Search This Blog

Friday, February 25, 2022

புத்தாண்டு

 புத்தாண்டு 


விடிய விடிய

வீதியிலே திரிவர்

வான வேடிக்கைகள்

வெடித்து மகிழ்வர். 


வாட்ஸப் வழிந்தோட

வாழ்த்தை பொழிவர்

வருடத்தின் முடிவில்

உறக்கம் தொலைப்பர். 


காதலிக்கும் ஜோடிகள் 

கடற்கரையில் சேர்ந்து

ஆண்டு தொடக்கத்தை

ஆவலுடன் நோக்குவர். 


வாலிப சிட்டுகளோ

வாகனத்தில் சுற்றி

விசித்திரமாய் தமது

பொழுதை போக்குவர். 


ஆறிரு திங்களில்

சாதித்தது எத்தனை

அட்டவணை போட்டு

அலசுதல் வேண்டும். 


ஆங்கில மோகத்தில்

அமுங்கி விடாமல் நம்

கலாசார பண்பாட்டை

காத்திடல் வேண்டும். 


அர்த்த ராத்திரியில்

ஆலயம் திறக்காமல்

ஆகம விதிமுறையை

மதித்திடல் வேண்டும். 


தீயவை ஒழி(ந்)த்திட

திடம் கொள வேண்டும்

புத்தாண்டு கொள்கை

இடம் பெற வேண்டும். 


வரும் நாட்களில்

வற்றாத வளமும்

குன்றாத நலமும்

பெற வாழ்த்துகள். 


🌹💐🌷🌺🌻🌷💐 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

31.12.2021











No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...