புத்தாண்டு
விடிய விடிய
வீதியிலே திரிவர்
வான வேடிக்கைகள்
வெடித்து மகிழ்வர்.
வாட்ஸப் வழிந்தோட
வாழ்த்தை பொழிவர்
வருடத்தின் முடிவில்
உறக்கம் தொலைப்பர்.
காதலிக்கும் ஜோடிகள்
கடற்கரையில் சேர்ந்து
ஆண்டு தொடக்கத்தை
ஆவலுடன் நோக்குவர்.
வாலிப சிட்டுகளோ
வாகனத்தில் சுற்றி
விசித்திரமாய் தமது
பொழுதை போக்குவர்.
ஆறிரு திங்களில்
சாதித்தது எத்தனை
அட்டவணை போட்டு
அலசுதல் வேண்டும்.
ஆங்கில மோகத்தில்
அமுங்கி விடாமல் நம்
கலாசார பண்பாட்டை
காத்திடல் வேண்டும்.
அர்த்த ராத்திரியில்
ஆலயம் திறக்காமல்
ஆகம விதிமுறையை
மதித்திடல் வேண்டும்.
தீயவை ஒழி(ந்)த்திட
திடம் கொள வேண்டும்
புத்தாண்டு கொள்கை
இடம் பெற வேண்டும்.
வரும் நாட்களில்
வற்றாத வளமும்
குன்றாத நலமும்
பெற வாழ்த்துகள்.
🌹💐🌷🌺🌻🌷💐
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
31.12.2021
No comments:
Post a Comment