பிள்ளையார்
ஒரு தலை நீங்கி
வேழமுகம் பெற்று
இருவரைச் சுற்றி
பழம் ஏற்றான்.
மூவுலகத்தின்
முதற் பிள்ளை
நான்மறைகளின்
இவன் எல்லை.
ஐந்து கரங்கொண்ட
அம்பிகை மைந்தன்
ஆறுமுகனின் மூத்த
சோதரனாம்.
ஏழு நிலையையும்
ஆட்கொண்டருளி
எட்டு திக்கினையும்
காப்பவனாம்.
ஒன்பது கோள்களும்
அவனிடம் பணியும்
பத்து தலை ராவணன்
செருக்ககற்றவனாம்.
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
22.12.2021
No comments:
Post a Comment