Search This Blog

Friday, February 25, 2022

பிள்ளையார்

 பிள்ளையார் 


ஒரு தலை நீங்கி

வேழமுகம் பெற்று

இருவரைச் சுற்றி

பழம் ஏற்றான். 


மூவுலகத்தின்

முதற் பிள்ளை

நான்மறைகளின்

இவன் எல்லை. 


ஐந்து கரங்கொண்ட

அம்பிகை மைந்தன்

ஆறுமுகனின் மூத்த 

சோதரனாம். 


ஏழு நிலையையும்

ஆட்கொண்டருளி

எட்டு திக்கினையும்

காப்பவனாம். 


ஒன்பது கோள்களும்

அவனிடம் பணியும்

பத்து தலை ராவணன்

செருக்ககற்றவனாம். 


அன்பன், சிதம்பரம்

ஆர்.வீ. பாலா

22.12.2021


No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...