Search This Blog

Thursday, September 15, 2022

பிரதோஷம்

பிரதோஷம் 

தொந்தி மைந்தன்
ஒரு புறம் இருக்க
பிந்தி பிறந்தவன்
மறு புறம் நிற்க
துந்துபி நாதம்
எங்கும் முழங்க
நந்தி தேவரும்
மத்தளம் தட்ட
நாரத முனிவர்
தந்தியை மீட்ட
நான்முக கடவுள்
மறைகளை ஓத
இந்திரனுடன் கூடி
அமரர்கள் துதிக்க
இமயவன் மகளும்
அருகினில் இருக்க
அந்தி சாயும் வேளை
ஆனந்த நடனம் அதை
தரிசித்து திளைக்க
தில்லைக்கு போகனும். 

சித்ஸபேஸா
சிவசிதம்பரம் 

அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
08.09.2022

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...