பிரதோஷம்
பிரதோஷம்
நிறைமதி
பொலிவொடு
இடப் புறம்
உமையொடு
பிறைமதி சூடிய
பெருமானே..
பகிரதன்
தவத்திற்கு
அருளிடும்
மனத்துடன்
சிரமதில்
நதி கொண்ட
பெருமானே.
மறையது
பொருளுக்கு
விளக்கமும்
பெறுதற்கு
குமரனைக்
குருவென்ற
பெருமானே..
மாலயன்
தேடியும்
முடிவினில்
துவண்டதும்
கரையிலா
கயிலாய
பெருமானே.
தக்கனை
எரித்தப்பின்
திரிபுரம்
அழித்தப்பின்
விரிசடை
விரித்தாடும்
பெருமானே.
முறையிடும்
பக்தர்கள்
குறையினை
களைந்திட
திருவுள்ளம்
கொண்டிடும்
பெருமானே.
தில்லை
அம்பலத்தில்
தீக்ஷிதர்கள்
பூசிக்க
தரிசனம்
தந்திடும்
பெருமானே.
நின்
திருவடி
நிழலினில்
பாலன்
எனையிருத்தி
தடுத்தாட்கொள்வாய்
பெருமானே.
சித்ஸபேஸா
சிவசிதம்பரம்
அன்பன், சிதம்பரம்
ஆர்.வீ. பாலா
04.03.2023