Search This Blog

Saturday, January 27, 2018

ஆகாயம்




முடிவில்லாதது
முற்றுப்பெறாதது
நவகோள்களும் நித்தம்
நகரும் ஆகாயமிது..

சூரியனும் சந்திரனும்
எண்ணிலடங்காத
நட்சத்திரமும் கூடியுள்ள
அண்டவெளி..

அண்ணாந்து பார்க்கையிலே
ஆச்சரியம் தினமும் வரும்
ஆகாய விமானங்கள் வெகு
அழகாக விரைந்து செல்லும்..

ஆகாய ஊஞ்சலிலே
ஆரவாரம் செய்தபடி
பறவைகள் பலவிதமாய்
சிறகிட்டு பறந்திடுமே..

மழைநீரைத் தந்திடும்
கார்மேக கூட்டமும்
உலா வந்து போவது
ஆகாயத்தின் கீழே..

பஞ்சபூத தலங்களில்
ஆகாயத்தைக் குறிப்பது
சிதம்பரத்தில் உள்ள
தில்லை நடராஜர் கோவில்..

புவியனைத்தையும்
போர்த்தி இருக்கும்
நீளவானம் நீலவானம்
பார்க்க என்றும் பிரமிப்பு..

பஞ்சபூதங்களை வரிசைப்படுத்தி
நித்தம் ஒரு கவிதை எழுதும் எண்ணம்.

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.11.17







No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...