முடிவில்லாதது
முற்றுப்பெறாதது
நவகோள்களும் நித்தம்
நகரும் ஆகாயமிது..
சூரியனும் சந்திரனும்
எண்ணிலடங்காத
நட்சத்திரமும் கூடியுள்ள
அண்டவெளி..
அண்ணாந்து பார்க்கையிலே
ஆச்சரியம் தினமும் வரும்
ஆகாய விமானங்கள் வெகு
அழகாக விரைந்து செல்லும்..
ஆகாய ஊஞ்சலிலே
ஆரவாரம் செய்தபடி
பறவைகள் பலவிதமாய்
சிறகிட்டு பறந்திடுமே..
மழைநீரைத் தந்திடும்
கார்மேக கூட்டமும்
உலா வந்து போவது
ஆகாயத்தின் கீழே..
பஞ்சபூத தலங்களில்
ஆகாயத்தைக் குறிப்பது
சிதம்பரத்தில் உள்ள
தில்லை நடராஜர் கோவில்..
புவியனைத்தையும்
போர்த்தி இருக்கும்
நீளவானம் நீலவானம்
பார்க்க என்றும் பிரமிப்பு..
பஞ்சபூதங்களை வரிசைப்படுத்தி
நித்தம் ஒரு கவிதை எழுதும் எண்ணம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
05.11.17
No comments:
Post a Comment