சிங்கம் போல இவன்
சிலிர்த்து கிடந்தாலும்
சங்கடம் வந்தால்
சிதைந்து போவான்..
அன்பினை ஆழ்மனதில்
அமுக்கி வைத்தபடி
அலைந்து திரிந்திடும்
அப்பாவி வர்க்கம் இவனே..
தனக்கென வாழாமல் தனது
குடும்பத்திற்காகவே வாழ்வதால்
கனவுலகில் கால் நூற்றாண்டு
கவலையுலகில் அரை நூற்றாண்டு..
சொந்த வீடும் சொகுசு காரும்
வாங்க எண்ணியே வயசு கழிந்து
வருந்தியே வாழ்க்கை நடத்தும்
வாலிப கூட்டம் அநேகம் உண்டு..
கல்யாணக் கனவு கண்டு
கை நிறைய சம்பளம் நோக்கி
காலத்தை கடத்தி செல்லும்
காளையர்கள் கோடி உண்டு..
தனக்கு கிட்டாத சுகத்தினை
தன் பிள்ளைக்கு அளித்திட
உழைத்து ஓடாய்த் தேய்பவன்
அப்பாவெனும் ஆண்மகன் ஆவான்..
அடுத்த வருடத்திற்கு
மிச்ச வரிகளை வைக்கிறேன்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
19.11.17
No comments:
Post a Comment