Search This Blog

Saturday, January 27, 2018

அறிஞர் அண்ணா !!



!! அறிஞர் அண்ணா !!

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
விழிகளைத் தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."

"A sentence should not end in because, because, because is a conjunction"

அங்கிலமாகட்டும், அன்னை
தமிழ் மொழியாகட்டும், அடுக்கு மொழிகளால் அனைவரையும்
வசீகரித்த தமிழன் நீ..

காஞ்சி பட்டுக்கு மட்டும் சிறப்பைப் பெறவில்லை, பளிங்கு தமிழ் பேசிய
பச்சைய்யப்பன் கல்லூரி மாணவன்
உன்னாலும் தான் சிறப்பைக் கண்டது..

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற
கோட்பாட்டை கண்டு பிடித்தவன் நீ
கழகத்தை துவங்கி வைத்து பல
தோழர்களை தட்டி எழுப்பியவன் நீ..

தமிழக மாவட்டம் தோறும் உன்
பெயரில்லா ஒரு தெருவும் இல்லை
அண்ணா நின் பெயர் தழுவாத எந்த
திராவிட கட்சியும் இல்லை..

சமூக நீதியோடு சேர்த்து
சமய நீதிக்கும் பங்கம் வராமல்
காத்திட உன்னுடைய அரசியல்
ஆசானையே எதிர்த்த தலைவன் நீ..

அண்ணா என்பது வெறும் உறவுச்
சொல் மட்டும் அல்ல, ஒவ்வொரு
தமிழனின் மூச்சிலும் கலந்த
உயிர்ச் சொல் என்பதே நிஜம்..

இன்னுமொரு கக்கனும்
கர்மவீரர் காமராஜரும்
கனிவு மொழி பேசி வந்த
அண்ணாதுரையும் தமிழகத்திற்கு
கிடைப்பது எப்போது ???

அண்ணாவின் நினைவு தினத்திற்கு
வடித்த வரிகள், அவர் தம் தமிழுக்காக எழுத்தப்பட்டதே தவிர திராவிட
கட்சிக்காக அல்ல..

இனிய இரவு வணக்கம்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
03.02.2017..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...