அதீத ஆசை போகம், பின்னர்
அதுவே தரும் பெரும் சோகம்.
புண்ணிய பலன் நம் தேகம், இது
புரிந்திராவிடில் வரும் ரோகம்.
இளமையில் இருப்பது வேகம், நமை
முதுமையில் காப்பது விவேகம்.
நம் தந்நம்பிக்கையில் உள்ள மோகம்,
தருமே வாழ்வினில் ஆனந்த ராகம்.
இனிய மாலை வணக்கம்.
அன்புடன், ஆர்.வீ. பாலா..
No comments:
Post a Comment