Search This Blog

Saturday, January 27, 2018

ரஜினி அரசியல் பிரவேசம்



அதிரடி அறிவிப்பு

திசம்பர் 31 ஆம் தேதி
அறிவிப்பு வருமாம் !

எப்ப வருவேன் நான்
எப்படி வருவேன்னு
தெரியாது ஆனா
வரவேண்டிய நேரத்துல
கரெக்டா வருவேன்
ஆண்டவன் சொல்றான்
அருணாசலம் செய்றான்..

ஐயா இம்மாதிரி
தொடர் வசனங்கள்
கேட்டு கேட்டு எங்கள்
காதுகள் இப்போது
கிழிந்து போயுள்ளது.

என்ன பேசுகிறார் என
புரிந்து கொள்ள இயலா
சகலகலா நடிகர் ஒருபுறம்
என்ன பேசுவார் என
என்றும் விளங்க முடியா
உச்ச நடிகர் மறுபுறம்..

அரசியலில் இறங்கி
அஸ்திவாரம் ஆடிப்போன
மதுரைக்கார நடிகர் இன்று
மாயமாய்ப் போனது
உமக்கும் தெரிந்திருக்கும்..

குழப்பம் உண்டு பண்ணி
வசூல் வேட்டை காண்பதும்
புரியாத வகையில் எப்பவும்
புதிர் போட்டு பேசுவதும்
நிறுத்தும் தலைவா, சற்று
தெளிவாய் முடிவெடுங்கள்
தமிழர்களை விடுவியுங்கள்..

அடுத்த வருடமும் இதே நிலை
தொடர்ந்தால் நீங்கள் முன்பு
கூறிய வசனமே எங்களுக்கு

"ஆண்டவன் நினைத்தாலும்
தமிழகத்தை இனி காப்பாற்ற
முடியாது"..

திரைப்பட நடிகர்கள் மட்டுமே
தமிழகத்தை ஆள முடியும்
எனும் கட்டாயம் இல்லையே
நல்ல மனிதரை நாமும்
இனம் காணல் வேண்டும்
கட்சிக்கு வாக்களிக்காமல்
கண்ணியம் பார்த்து நமது
வாக்கினை அளிப்போம்..

ஒரு தமிழனாக
ஒரு ரசிகனாக
இவ்வரிகளை
பதிவிடுகிறேன்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
27.12.17




No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...