உஷார் உஷார்
சைவத்திற்கும்
வைணவத்திற்கும்
சண்டையினை மூட்டுவர்
சனாதன மார்க்கமென்று
சமயத்தையும் சாடுவர்
திராவிடம் ஆரியம் என்று
திரித்து பலவாய்க் கூறுவர்
வேதபாஷை வடமொழியை
வேற்று பாஷை என்பர்
சாதி மத கலவரத்தில்
சண்டையிட்டு மகிழ்வர்
பாமர மக்களை நித்தம்
திசை திருப்பி விடுவர்
நாத்திக போர்வையிலே
நஞ்சை விதைத்து விடுவர்
நாட்டு மக்கள் அமைதிக்கு
நாசம் செய்து வைப்பர்
சிறுபான்மை காவலென
சச்சரவும் தினம் செய்வர்
சிந்திக்கும் மதியின்றி
சோம்பேறியாய்த் திரிவர்
கள்ள ஓட்டு போட்டு விட்டு
நல்லவராய் நடிப்பர் இவர்
மொள்ளமாறித்தனத்தில்
முதன்மை இடம் பெறுவர்..
உஷார் உஷார் உஷார்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.18
No comments:
Post a Comment