Search This Blog

Sunday, January 28, 2018

உஷார் உஷார்

உஷார் உஷார்

சைவத்திற்கும்
வைணவத்திற்கும்
சண்டையினை மூட்டுவர்
சனாதன மார்க்கமென்று
சமயத்தையும் சாடுவர்
திராவிடம் ஆரியம் என்று
திரித்து பலவாய்க் கூறுவர்
வேதபாஷை வடமொழியை
வேற்று பாஷை என்பர்
சாதி மத கலவரத்தில்
சண்டையிட்டு மகிழ்வர்
பாமர மக்களை நித்தம்
திசை திருப்பி விடுவர்
நாத்திக போர்வையிலே
நஞ்சை விதைத்து விடுவர்
நாட்டு மக்கள் அமைதிக்கு
நாசம் செய்து வைப்பர்
சிறுபான்மை காவலென
சச்சரவும் தினம் செய்வர்
சிந்திக்கும் மதியின்றி
சோம்பேறியாய்த் திரிவர்
கள்ள ஓட்டு போட்டு விட்டு
நல்லவராய் நடிப்பர் இவர்
மொள்ளமாறித்தனத்தில்
முதன்மை இடம் பெறுவர்..

உஷார் உஷார் உஷார்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...