இளையராஜா ஐயர்
இளையராஜா அந்தணர் ஆக
விரும்புவதாக பாரதிராஜா
உ(கு)ரைக்கிறாராம்..
பிறப்பால் அந்தணர் ஆவோர் பலர்
தனது சிறப்பால் / அறத்தால்
அந்தணர் ஆவோர் மிக சிலர்..
எங்கள் இசைஞானி இதில்
இரண்டாம் வகை..
போற்றுவோம் அவர் புகழை
வயிற்றெரிச்சலில் புழுங்கட்டும்
மற்றைய மனிதரெல்லாம்..
பாரத ரத்னாவிற்கு
பத்மவிபூஷன் கிடைத்தது
பாரதிராசாவிற்கு நெஞ்சு
பொறுக்கவில்லை போலும்..
புலம்பியே சாவட்டும் இந்த
பொய்முகத்து மாந்தர்கள்
என் இனிய தமிழ் மக்களே என
இனி ஏமாற்றுவது பலிக்காது..
விவாத மேடை வைத்து
ஊடகங்கள் கூட தினம்
உள்நோக்கத்துடனே
உளறித் தீர்க்கின்றன..
சாதியக் கண்ணோட்டத்தில்
சலித்துப் பார்ப்பதே என்றும்
சாக்கடைகளுக்கு வாடிக்கையாம்..
உயர்சாதி மக்கள் என்றும்
பிற சாதி மனிதர்களை
தரம் பார்த்து பிரிப்பதில்லை
தமிழர்களுக்கும் தெரியும்..
சாதி மத துவேஷம் மூலம்
சச்சரவை மூட்டுகின்ற
சதிகார கும்பல்களுக்கு
சாவுமணி அடிக்க வேண்டும்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.01.18
No comments:
Post a Comment