பிரதோஷம்
அந்தி மாலை வேளையிலே
அம்மையப்பனைத் தொழுது
அகம் குளிர அபிஷேகத்தை
ஆலயத்தில் காண்போம்..
இல்வாழ்வு சிறந்திடவே
இமயமலை வாசியிடம்
இம்மையும் மறுமையும்
ஈசன் பதம் பணிவோம்..
உலகெலாம் உணர்ந்தவனை
உய்விக்கும் பரம்பொருளை
உமா மகேஸ்வரனை நிதம்
ஊர் கூடி இறைஞ்சிடுவோம்..
எத்திக்கும் நிறைந்தவனை
எம பயத்தைத் தீர்ப்பவனை
எல்லாம் வல்ல நாயகனை
ஏகமாய் துதித்திடுவோம்..
ஒளி உமிழும் அக்கினியை
ஒலி உமிழும் டமருகத்தை
ஒருமித்தே வைத்து ஆடும்
ஓங்காரத்தை நாடிடுவோம்..
பிரதோஷ நந்நாளில்
பரமேஸ்வரனை வணங்கி
பொற்பாதம் பணிந்திடவே
பாவங்கள் விலகிவிடும்..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.01.18
No comments:
Post a Comment