ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி
துங்கபத்ரா நதிக்கரையில்
துயில் கொண்ட தூயவரே
துயர் யாவும் தீர்த்து வைக்கும்
தயை கொண்ட மா தவரே
புவனகிரியில் அவதரித்த
புண்ணிய மூர்த்தி, இவர்
பக்த பிரகலாதன் அம்சமாய்
பிறந்த கீர்த்தி..
தமிழகத்தில் அவதரித்து
ஆந்திரத்தில் சித்தியாகி
கன்னடர்கள் துதிபாடும்
காருண்ய மூர்த்தி..
பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராம், பக்தர்கள்
குறை தீரத்து அற்புதங்கள்
பல புரிந்தவராம்..
வேங்கட நாதனாய்
வேதம் பல பயின்று
ஸ்ரீ ராகவேந்திரராய்
சந்நியாசம் பெற்றார்..
மத்வ மடத்திற்கு பெரும்
பொறுப்பும் ஏற்று பின்னர்
மந்திராலயத்தில் துறவு
வாழ்வும் கொண்டார்..
ஜகமெலாம் ரக்ஷிக்க
ஜனித்த மூர்த்தி
ஜீவசமாதி கொண்டு
அருளும் மூர்த்தி..
மந்திராலயம் சென்று
மகானை வழிபடுவோம்
பிருந்தாவனம் கண்டு
பிறவிப்பயன் பெற்றிடுவோம்..
பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் காமதேனவே ||
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ராகவேந்த்ராய நம:
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18
No comments:
Post a Comment