Search This Blog

Saturday, February 24, 2018

சிதம்பரம்

சிதம்பரம்

சேர்த்து வைத்த
சொத்தையெண்ணி
சொக்கித்தானே
போகின்றேன்..

கார்த்தி என்னும் ஓர்
மகனுக்கு கோடிகள்
குவித்ததையெண்ணி
வியக்கின்றேன்..

அரசியல் களத்தில்
அடியெடுத்து வைத்து
அத்தனையையும்
அமுக்க பார்க்கின்றீர்..

சிவகங்கை சீமையில்
செல்வத்தில் பிறந்தும்
ஊழல்கள் புரிந்து
மாட்டிக் கொண்டீர்..

உள்ளத்தில் விஷத்தோடு
ஊர் மக்களை ஏமாற்ற
வெள்ளையாடையுடுத்தி
உலாவுகின்றீர்..

உலகம் முழுமையிலும்
ஓராயிரம் சொத்துக்கள்
உட்கார்ந்து கணக்கிடவே
வெளிவருமே பிணக்குகள்..

சாரதா சிட்பண்ட் மோசடியில்
தம் மனைவியாரின் ஊழலுக்கு
தடுமாறி வழக்காடியும் தம் பதில்
திருப்தியாயில்லை..

எல்லையில்லாது
கொள்ளையும் அடிக்க
வாகாக கிட்டியது
ஆட்சியும் அதிகாரமும்..

கால் நூற்றாண்டாக
காங்கிரஸ் கட்சியிலே
மத்திய அமைச்சராக
பெரும் பதவி வகித்தீரே..

வழக்கறிஞராக வாதாடி
சேர்த்த பணம் தமது
வருங்கால சந்ததிக்கு
போதாதென நினைத்தீரோ..

வெறுங்கையோடு
வானகமும் ஏகும் பொது
ஆறடி நிலம் கூட நமக்கு
சொந்தமாக வாராது..

கோவில் என்றாலே எங்கள்
சிதம்பரம் தான், அது போல
காங்கிரஸ் ஊழல் என்றாலே
சிதம்பரம் தான்.

வருத்தத்துடன் - வேதனையுடன்

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...