Search This Blog

Sunday, February 25, 2018

மயிலே மயிலே

மயிலே மயிலே

உலகில் பிறந்த
ஒவ்வொரு உயிரும்
ஒருநாள் உலகைப்
பிரியும்..

அகிலம் முழுவதும்
அனுதினம் உயிர்கள்
அமைதியாய் அடங்குது
தெரியும்..

மனதைக் கவர்ந்த
மக்களின் மறைவு
மாளாத் துயரத்தில்
தள்ளும்..

உற்றார் உறவினர்
பெற்றவர் மறைவு
பெரும் துயரத்தில்
ஆழ்த்தும் சகஜம்..

திரையில் நட்சத்திரமாய்
ஜொலித்தவள் இனிமேல்
வானிலும் நட்சத்திரமாய்
ஜொலிப்பாள்..

தோழியாக சகோதரியாக ஏன்
தாயாக ஒரு சிலரால் மட்டுமே
நடிக்க முடியும், அந்த மிகச் சிலரில்
ஸ்ரீதேவியும் ஒருவர்..

கவர்ச்சிக் கன்னியாக இவரை
கனவிலும் காண இயலாது
கண்ணிலும் நடிப்பு காட்ட
கண்ணே இவராலே இயலும்..

நிழலில் ஜோடி போட்ட மாதிரி
நிஜத்திலும் சேர்ந்திருந்தால்
எங்கள் உலக நாயகன் இப்படி
ஊர் சுற்றியிருக்க மாட்டார்..

அஜீத் - ஷாலினி
சூர்யா - ஜோதிகா
இவர்க்கு முன்னோடியாக
கமல் - ஸ்ரீதேவி

இப்படி பலவிதமாய் எமக்கு
எண்ணத் தோன்றுகிறது.

வடநாட்டில் வாக்கப்பட்டு
தென்னாட்டை வஞ்சித் தாயே..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிரோ... ஓராரிரோ…

ராரிரோ… ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப் பேடு பண்பாடும்
ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைப்பேன்

உனக்கே உயிரானேன்
என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி 

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான்பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிரோ... ஓராரிரோ…

ராரிரோ… ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…

கவியரசரின் கடைசி பாடல் வரிகளை
இசைஞானியின் மெல்லிய இசையில்
கண்ணை மூடி கேட்டுக் கொண்டிருக்க
காற்றினில் கரைந்து போனாயே..

என்றும் மயிலின் நினைவலைகளில்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.02.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...