சிறு சிந்தனைகள்
நாளைய உணவை இன்று
உண்ண முடியுமா ? நம்மால்
நடப்பவை எதையும் முன்னம்
உணர முடியுமா ?
காக்கை குருவிகள்
சேர்த்து வைப்பதில்லை
கவலையால் தொய்ந்து
போவதில்லை..
விதி விட்ட வழியில் தான்
வாழ்க்கையும் நகரும்
வீண்பட்ட சிந்தனைகள்
விழலாகிப் போகும்..
பழுதுபட்ட வாகனத்தை
பராமரிப்பதைப் போல
பாழ்பட்ட நம் மனதை
பக்தி வழி வைப்போம்..
ஆறறிவு மதியிழந்து
ஐம்புலனை அலையவிட்டு
நாற்புறமும் திரியாமல்
முக்கண்ணனைப் பணிவோம்..
கவியரசரின் வரிகளில் ;
நாளைய பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடுவோம்..
💐💐🙏🙏💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
24.03.18
No comments:
Post a Comment