திருமயிலை
கயிலையே
மயிலையாம்
மயிலையே
கயிலையாம்..
அறுபத்து மூவர்
உற்சவம் இங்கு
அமர்க்கலமாய்
நடக்குது..
அடியவர்கள்
போடும் கோஷம்
விண்ணதிர
கேக்குது..
தேவார திருவாசக
பதிகங்கள் ஓதுவர்
திவ்யமாய் ஒருசேர
பக்தியுடன் சுற்றுவர்..
மனமார கபாலியை
தரிசித்து மகிழலாம்
பசியாற பிரசாதங்கள்
புசித்து ரசிக்கலாம்..
இலட்சங்களில்
பக்தர்களின்
தலைகளையும்
காணலாம்..
இராப்பகலாய்
கோவிலுக்குள்
திருப்பணிகள்
பார்க்கலாம்..
பெரியாரின்
பேரன்களே நீங்கள்
திருமயிலைக்கு
வாருங்கள்..
பக்தி மெச்சும்
கூட்டத்தினை
பார்த்துவிட்டு
சொல்லுங்கள்..
அரசியல் மாநாட்டு
கூட்டமுமல்ல, இது
ஆதாயம் பார்த்து
சேர்ந்ததுமல்ல..
இந்துக்களை தினம்
இம்சிக்கும் கட்சியினரே
நாங்கள் சாதுக்களானதால்
நீங்கள் தப்பித்தனரே..
எவரையும் இழித்துப் பேச
இஷ்டமுமில்லை எந்த
மதத்தினர் பழித்தாலும்
நஷ்டமுமில்லை..
ஆயிரங்காலமாய்
அழியாது இருந்திடும்
இந்து மதம் என்கின்ற
இறுமாப்பு எமக்குண்டு..
கயிலையே
மயிலையாம்
மயிலையே
கயிலையாம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.03.18
No comments:
Post a Comment