Search This Blog

Tuesday, April 10, 2018

கைப்பேசியும் நானும்

கைப்பேசியும் நானும்

என்னவாயிற்று எனக்கு !!!

எட்டி எட்டிப் பார்க்கின்றேன்
ஏகாந்தத்தில் லயிக்கின்றேன்
ஏதோ ஒன்றை நினைத்தபடி
ஏமாற்றத்தில் கிடக்கின்றேன்..

கைப்பேசியை காதலித்து
கண்ணகல விரிக்கின்றேன்
தகவலுக்கு தொடுதிரையை
தடவி தடவிப் பார்க்கின்றேன்..

இனம்புரியா இன்பத்திலே
சிரித்தபடி செல்கின்றேன்
மனம் குழம்பி பல நேரத்தில்
வருத்தமுடன் நடக்கின்றேன்..

என் படைப்புகளை பரிமாறி
திருப்தியாக உணர்கின்றேன்
உணர்ச்சிகளை வரிகளாக்கி
உள்ளத்தையே தெளிக்கின்றேன்..

காதலர்கள் முறுவலிப்பது போல்
ஆசை கொண்டு அமைகின்றேன்
கன்னியர்கள் நெளிவதைப் போல்
கை நடுங்க உனை எடுக்கின்றேன்..

என்னவாயிற்று எனக்கு !!!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...