போராட்டம் எதற்கு
எவ்வளவு அலைச்சல்கள்
ஏனிந்த குழப்பங்கள்
ஏதுமறியாத மாந்தர்களை
ஏமாற்றும் கும்பல்கள்..
வீணான புரளிகளிட்டு
விஷமச் செய்திகளோடே
அப்பாவி மனிதர்களை
அலைக்கழிப்பது நியாயமல்ல..
வீதியிலே இறங்கி நடத்தும்
வேடிக்கை போராட்டங்கள்
அரசியல் ஆதாயம் வேண்டி
அற்பர்கள் செய்பவையாகும்..
நாளைய தலைமுறையினரை
நயவஞ்சகமாய் மனசு மாற்றி
கூச்சலும் குழப்பங்களுடனே
போராடச் செய்வது முறையோ..
உண்மை தலைவர் யாரென்று
உணர்ந்து கொள்ளும் நேரமிது
கபட நாடகம் ஆடுவோர்களை
களையெடுக்கும் சமயமிது..
நடைப்பயணம் என்ற பெயரில்
நாலுசக்கர வண்டியில் போவார்
பாலுக்கு காவலன் கூடவே
பூனைக்குத் தோழனும் ஆவார்..
கருப்பு சட்டைகள் ஒன்றாய்
களமிறங்கி கோஷமிடுகையில்
கூத்தாடிகள் சில பேரும் சேர்ந்து
சமூகத்தை சீர்குலைக்க செய்வர்..
அந்நிய கைக்கூலிகளாக
அட்டகாசம் புரிவோரெல்லாம்
அடையாளம் காணப்பட்டு உடனே
அடக்கி வைக்கப்படல் வேண்டும்..
ஆலை விரிவாக்கம் வேண்டாம்
வேலைவாய்ப்பு பெருகிட வேண்டாம்
இலவசங்களும் இடஒதுக்கீடுகளும்
இன்னும் தாராளமாய் வேண்டும்..
சுயநலத்துடனே சூழ்ச்சிகள் செய்து
சம்பாதிக்க நினைப்போர் ஏராளம்
பிரச்சினையாக்கி போராட்டம் மூலம்
பிரித்தாள நினைப்போர் உஷாராவோம்.
எங்கே போகிறோம் எம்மக்களே
ஏமாளிகளாக நாம் மாறுவதற்கா ??
வருத்தத்துடன்....
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
11.04.18
No comments:
Post a Comment