சிவ சிவா
நந்தி தேவரைப் போல
முன்னமர்ந்து இருக்கனும்
நாகமாய் அவன் கழுத்தில்
அகலாது இருக்கனும்..
டமருகமாய் கைதனிலே
ஓயாமல் ஒலிக்கனும்
முயலகனாய் மிதிபட்டு
கால் கீழே கிடக்கனும்..
வில்வ தலமாய் மாறி
விரிசடையில் அமரனும்
பிறை நிலவாய் உருமாறி
பெருமானிடம் சேரணும்..
மீனாகப் பிறப்பெடுத்து
சிவகங்கையில் கிடக்கனும்
குளத்து நீரை சுத்தம் செய்து
அபிஷேகத்துக்கு உதவனும்..
அடியாராய் அவனடியை
அடிபணிந்து கிடக்கனும்
திருநீற்றைத் தரித்தபடி
தினந்தோறும் தொழுகனும்..
தேனமுத தேவாரப்
பதிகங்கள் பாடனும்
தேவாதி தேவனை
தரிசித்து மகிழனும்..
தில்லையிலே தீட்ஷிதராய்
மறுபிறப்பும் எடுக்கனும்
நடராஜப் பெருமானை
நிதம் பூசித்து களிக்கனும்.
பிரதோஷ நந்நாளாம் இன்று
பெருமானை வணங்குவோம்..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.18
No comments:
Post a Comment