Search This Blog

Thursday, April 12, 2018

சிவ சிவா

சிவ சிவா

நந்தி தேவரைப் போல
முன்னமர்ந்து இருக்கனும்
நாகமாய் அவன் கழுத்தில்
அகலாது இருக்கனும்..

டமருகமாய் கைதனிலே
ஓயாமல் ஒலிக்கனும்
முயலகனாய் மிதிபட்டு
கால் கீழே கிடக்கனும்..

வில்வ தலமாய் மாறி
விரிசடையில் அமரனும்
பிறை நிலவாய் உருமாறி
பெருமானிடம் சேரணும்..

மீனாகப் பிறப்பெடுத்து
சிவகங்கையில் கிடக்கனும்
குளத்து நீரை சுத்தம் செய்து
அபிஷேகத்துக்கு உதவனும்..

அடியாராய் அவனடியை
அடிபணிந்து கிடக்கனும்
திருநீற்றைத் தரித்தபடி
தினந்தோறும் தொழுகனும்..

தேனமுத தேவாரப்
பதிகங்கள் பாடனும்
தேவாதி தேவனை
தரிசித்து மகிழனும்..

தில்லையிலே தீட்ஷிதராய்
மறுபிறப்பும் எடுக்கனும்
நடராஜப் பெருமானை
நிதம் பூசித்து களிக்கனும்.

பிரதோஷ நந்நாளாம் இன்று
பெருமானை வணங்குவோம்..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...