Search This Blog

Friday, April 13, 2018

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹேவிளம்பி வருடம்
முடிந்து நாளைக்கு
விளம்பி வருடத்து
துவக்கம்..

வருடங்கள் மாறினாலும்
திட்டங்கள் மாற்றினாலும்
தீராத பிரச்சினைகளால்
கலக்கம்..

சராசரி குடிமகனாக
சமுதாய அக்கரையில்
சில கோரிக்கையும்
எமக்கு உண்டு..

கருணை கொண்டு
காவிரி நதி நீரினை
கர்நாடக மாநிலமும்
பகிர்ந்திடல் வேண்டும்..

கருப்பு சட்டைகள்
சேட்டைகள் நிறுத்தி
நாட்டின் வளர்ச்சிக்கு
முனைந்திட வேண்டும்..

பிரிவினை செய்யும்
அந்நிய சக்திகளை
இனம் காணப்பட்டு
ஒடுக்கிட வேண்டும்..

இலவசங்களை
பதமாக குறைத்து
உழைக்கும் மக்களை
ஊக்குவிக்க வேண்டும்..

சாதி மதப் பிரிவினால்
சமூகத்தை குலைப்போரை
வேரோடு களைந்து
எறிந்திடல் வேண்டும்..

அரசு திட்டங்களை
ஆதாயத்தின் கீழ் பாராமல்
வளர்ச்சிக்கு வித்திட்டால்
அமல்படுத்த வேண்டும்..

நித்தம் ஒரு பூசல் வைத்து
நிர்வாகத்தை நடத்த விடாமல்
நடுத்தெருவில் கொடி பிடிக்கும்
கூட்டங்களை சாடிட வேண்டும்..

நல்லதையே நினைப்போம்
நல்லதையே புரிவோம்......

வாழ்க வளர்க..

இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்களுடன் 💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.04.18

* நாளைய தினம் நிறைய
பகிர்வு செய்திகள் கிடைக்கும்.
அதனூடே அடியேனது வாழ்த்து
அமிழ்ந்து போய்விடும், ஆதலால்
ஒரு நாள் முன்னமேயே நான்
வாழ்த்திட விழைந்திட்டேன்..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...