Search This Blog

Saturday, April 14, 2018

பெண்ணே நீ வாழ்க

பெண்ணே நீ வாழ்க

அன்புக்கினியவளே !!

ஆயிரம் விசனத்தோடு
அடுப்பங்கரையிலும்
அலுவலகத்திலும் இன்று
அல்லலுற்று நீ கிடக்கிறாய்..

அகிலத்தில் பெண்கள்
அத்துனை பேருக்கும்
ஆண்டவன் விதித்தது
அன்னமே இவ்வாழ்க்கை..

தைரியத்துடனே நீ
எதையும் எதிர்க்கொள்
துணிந்து நடப்பவையை
சமாளிக்கப் பழகிக் கொள்..

வீர மங்கைகளாம்
வேலு நாச்சியாரும்
இராணி லக்ஷ்மிமிபாயும்
வாழ்ந்த புண்ணிய பூமியிது..

நல்லதே நடக்கும் என
நம்பிக்கை கொண்டால்
நடப்பவை அனைத்தும்
நன்மையாகவே முடியும்..

புத்தாண்டு நந்நாளில் நாம்
பெண்மையைப் போற்றுவோம்
பிறந்த வீடு புகுந்த வீடு கொண்ட
பிராட்டிகளை வணங்குவோம்..

💐💐💐💐💐👏👏👏👏

வாழ்க வளமுடன் !!
என்றும் நலமுடன் !!

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.04.18

* பெண்கள் தினத்திற்கு
   மட்டுமா எழுதணும்..
  ஆண்டு முழுவதும்
  அவர்களது தினமே..

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...