Search This Blog

Sunday, April 15, 2018

பகிரப் பழகு

பகிரப் பழகு

நாட்பட்ட ரணத்தினை
நான்கு சுவற்றுக்குள்
அடைத்துப் போடுவது
இயலாது போகும்..

நாசூக்காய் நவிலவும்
நளினமாய் தேற்றவும்
நல்லதாய் நட்பொன்று
நமக்குத் தேவையாகும்..

திரித்துப் பேசிடும்
உறவினர்க்கிடையிலே
தேற்றிப் பேசிடவே நல்ல
நண்பர்கள் வேண்டும்..

என்நண்பர் நன்நண்பரென
பகுத்திடும் அறிவுதனை
பக்குவமாய் கையாளத்
தெரிய வேண்டும்..

சமூக வலைதளத்தில்
சத்தமின்றி விஷமிகளும்
சாது வேடம் பூண்டுள்ளார்
உஷாராவோம்..

உற்றார் உரைத்தாலும்
உலகமே பழித்தாலும்
உன் வாழ்க்கை உன் கையில்
பார்த்து பகிர பழக வேண்டும்..

வாழ்க வளர்க 💐💐💐💐💐

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.04.18

* முகநூல், வாட்ஸப் என்று
பிரபலமான வலைதளங்களில்
நம்முடைய தனிப்பட்ட நிறை
குறைகளை பகிர்வதற்கு
முன் சற்றே சிந்திக்க வேண்டியது
என்றுமே நல்லது...

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...