Search This Blog

Monday, April 16, 2018

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

எல்லாம் இருந்த பின்னும்
ஏதோ ஒரு குறையாக நான்
எதையோ எண்ணி நித்தம்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

பணத்திற்கு குறைவில்லை
பட்டினியாய் கிடப்பதில்லை
இருந்தும் இல்லாதது போல்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

அன்புக்கு ஓர் மனைவி
ஆசைக்கு பிள்ளைகளென
அத்தனையுமிருந்தும் நான்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

சொந்தமாய் வீடு  உண்டு
சொந்தங்கள் பலரும் உண்டு
சோதனைகள் இல்லாவிடுனும்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

அக்கம்பக்கம் பார்த்து நான்
ஆசையும் கொண்டதில்லை
ஆதரவாய் பலரிருந்தும் ஏனோ
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

படைத்தவன் போட்ட கணக்கு
பிழையாக ஓர் வாய்ப்பில்லை
பித்தனாய் மனம் பேதலித்து
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

எல்லாம் இருந்த பின்னும்
ஏதோ ஒரு குறையாக நான்
எதையோ எண்ணி நித்தம்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
என்று என்னையே பலமுறை
கேட்டும் பதில் கிட்டாமல் நான்
எதிர்பார்த்து நிற்கின்றேன்..

இறைவா !!!!

என்னையே நான் வென்றிட
எனக்கு அருளும் புரிந்திடு
எந்நாளும் உனை மறவாத
நினைப்பையும் நீ தந்திடு..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.04.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...