கும்பாபிஷேக வைபவம்
அமர்க்கலமாய்
யாகசாலை நடந்தது
நான்கு கால பூசைகளும்
முடிந்தது..
தீட்ஷிதர்களின் வேத கோஷம்
விண்ணைப் பிளந்தது, காட்டிய
தீப ஒளி எங்கள் கண்களிளில்
முழுவதுமாய் நிறைந்தது..
கொண்டாட்டமாய்
கும்பாபிஷேகம்
நடந்தது, தில்லையில்
குருவைய்யர் வீதியே
அதிர்ந்தது..
இல்லத்து திருமணம் போல்
உள்ளத்தில் உற்சாகமாய்
ஏக்கத்தை தீர்த்து வைத்து
வைபவமும் நடந்தது..
எடுத்து கட்டி செய்த
எடுத்துக்காட்டாய் செய்த
எம் ஜடா விநாயக பக்தர்களின்
கைங்கர்ய பலன் கனிந்தது..
பெரிய கோவில் அமைத்து
பீடத்தை ஏற்றி வைத்து அதில்
பிரம்மாண்டமாய் கொலுவிருக்கும்
எங்கள் அழகு பிள்ளையார்..
மகாபிஷேகம் முடிந்து
தீபாராதனை ஒளியிலே
கணபதியைக் கண்டதும்
கண்ணீர் வராத கண்கள்
இல்லை..
கனவாக இருந்த ஒன்றை
நனவாக காணுகையில்
கதறி ஆனந்த நீர் சொரிந்த
கன்னங்கள் ஆயிரம்..
பெரிய பிள்ளையார் இப்போது
சிறிய பிள்ளையாராய் உள்ளாராம்
ஆம் இன்று பிறந்த குழந்தை போல
குட்டி பிள்ளையாராய் உள்ளார்..
மண்டலாபிஷேகம் முடிந்ததும்
மகிழ்ச்சியில் மிடுக்கு ஏறிடும்
மனதிற்கும் ஆனந்த களிப்பில்
பழைய துடிப்பும் வந்திடும்..
அடியவர்கள் தங்கிடவும்
அன்னதானம் வழங்கிடவும்
இன்முகமாய் இடமளித்த
அக்ரஹாரவாசிகளுக்கு
நன்றி நன்றி நன்றி..
ஜெய் ஜடா விநாயக மூர்த்திகி !!
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.04.18
No comments:
Post a Comment