~~ நரசிம்ம ஜெயந்தி ~~
தூணிலும் இருப்பார், அவர்
துரும்பிலும் இருப்பார், பக்த
பிரகலாதனுக்கு வெளிப்பட்ட
பாற்கடல் வாசன்...
இரணியனை வதம் புரிந்து
ஈரேழு உலகையும் காத்து
அடியவர்தம் இன்னல் களைந்த
வைகுண்ட வாசன்..
சிம்ம முகம் கொண்ட அழகு
நர சிம்மர், மூவுலகை காத்திடவே
மூன்றாவதாய் அவதரித்த
தசாவதார மூர்த்தி..
பாவம் புரிவோருக்கு
பயத்தினைத் தந்திடுவாய்
சரணடையும் எளியோருக்கு
அபயக் கரத்தினை காட்டிடுவாய்..
லக்ஷ்மீ நரசிம்மராய் என்றும்
எமது இல்லத்தில் கொலுவிருந்து
மங்களத்தை நல்கிடவே
வேண்டுகிறேன் மாதவா..
அகோபிலம் சென்று ஐயனை
வழிபடுவோம், நவ நரசிம்ம ரூபம்
நமை ரட்சிக்க இறைஞ்சிடுவோம்..
ஜெய் நரசிம்ம ஸ்வாமி, ஜெய் ஜெய்
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
09.05.17
No comments:
Post a Comment