என்னவளே
கருநாகத்தையொத்த
நீண்ட கருங்கூந்தலை
கோதுவேன்..
கயல் விழியாள் என
கண்ணே உனை நான்
கொஞ்சுவேன்..
மான் விழியாள் என
மிரளும் உன் முகத்தை
பார்ப்பேன்..
கூரான அம்பொத்த
நின் நாசியினை
நாடுவேன்..
சங்கு போன்ற நின்
சரிந்த கழுத்தினை
காணுவேன்..
உதிரத்தின் நிறமொத்த
உன் அதரத்தை நான்
சுவைப்பேன்..
உதரத்தின் மேலமைந்த
உன்னழகு அடுக்குகளை
ஆளுவேன்..
இல்லாத இடையொன்றை
இனி எங்கே போய் நான்
தேடுவேன்..
வெட்டிய வாழையாக
நிற்கும் தொடைகளை
ஏந்துவேன்..
வெட்டிவேர் வாசத்துடன்
உன்னழகனைத்தையும்
வீழ்த்துவேன்..
சிலையாய் செதுக்கியுள்ள
செல்லமே உனையென்றும்
சேருவேன்..
தலை முதல் கால் வரை
தங்கமே உனை நித்தம்
தாங்குவேன்..
💐💐💐💐💐💐💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.04.18
No comments:
Post a Comment