ஜடா விநாயகா
வாரமாயிற்று
விக்னேஸ்வரா நினது
குடமுழுக்கினைக் கண்டு
வாரமாயிற்று..
வரமாயிற்று
விநாயகா உனை
வேண்டியவர்க்கு நல்
வரமாயிற்று..
மூன்று தலைமுறையினர்
மகிழ்வோடு அளவளாவி
முழுமுதற் கடவுளை கண்டு
களித்தாயிற்று..
ஆண்டிற்கும் மேலாக
அய்யா உனைப் பாராமல்
ஏங்கித் தவித்த ஏக்கம்
இனி இல்லாமல் போயிற்று..
நித்தம் உனை துதித்து
நின் நாமம் தியானித்த
நின் பக்தர்களின் துயரம்
நீங்களாயிற்று..
வார விடுமுறை நாளன்று
ஊர் கூடச் செய்து உனை
உள்ளம் நிறைத்து நாங்கள்
உவகையுற்றாயிற்று..
பக்த கோடிகளை
ரக்ஷித்து அருளும்
பிள்ளையாரப்பனை
பீடத்தில் ஏற்றியாயிற்று..
மண்டலாபிஷேகம் காணும்
மஹாகணபதி பக்தர்களின்
மனக் குறைகள் யாவையும்
நிவர்த்தியுற்றாயிற்று..
பெரிய கோவிலுக்குள்
பிரம்மாண்ட ரூபமாய்
பெருமானைக் காணும்
பிறவிப் பயனாயிற்று..
அம்பிகை புதல்வா
அக்ரஹார தலைவா
அனுதினமும் நின் கழல்
அடிபணிந்தாயிற்று..
!! ஜடா விநாயக மூர்த்திகி ஜெய் !!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18
* கடந்த 22.04.18 ஞாயிறன்று
குருவைய்யர் அக்ரஹாரத்தில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீமத் ஜடா விநாயக பெருமானின் ஆலய கும்பாபிஷேகம்
வெகு சிறப்பாய் நடந்தேறியது..
No comments:
Post a Comment