நடராஜா
இடதுபதம் தூக்கி
ஆடுகின்ற தில்லை
நடராஜா !!!!!
எக்கோவில் சென்றாலும்
எந்த கடவுளை கண்டாலும்
நின் நாமத்தையன்றி வேறு
என் நா நவில்வதில்லை..
சிவலிங்க மேனியுள்
சதாசிவமாய் நிறைந்து
சர்வ ஜகத்தையும் நீ
காத்தருள்வாய்..
புலிக்கால் முனிவரும்
பதஞ்சலி ரிஷியும்
பூசித்து உன்னை இப்
புவிக்கழைத்தர்..
அருவுருவமாயிருந்து
உருவத்தை எடுத்த நீ
நடராஜ ரூபத்திலே
காட்சியும் தந்தாய்..
அம்மையுடன் ஆட்டமிட்டு
இடதுபதம் மேலெழுப்பி
ஒற்றைக்காலில் நிற்கின்ற
கோலமும் கொண்டாய்..
தில்லை நடராஜனே !!!
அடியவர்க்கருள வேண்டி
அழகிய கயிலை விடுத்து
சிவகாமியுடன் சிதம்பரம்
க்ஷேத்திரமும் வந்தாய்..
எல்லா இறைவர்களும்
நின்றும் துயின்றுமிருக்க
என்னய்யனே நீ மட்டும் ஏன்
ஒருகாலில் நிற்கின்றாய்..
உலக இயக்கம் வேண்டியே
ஊர்த்துவ தாண்டவமாடும்
உமாபதியே நீயும் சற்று
ஓய்வெடுப்பாய்..
தில்லையம்பதியமர்ந்த
தேவார நாயகா, உனது
தூக்கிய திருவடியினை
சற்றே மாற்றி கொள்வாய்..
முயலகன் மீது வைத்த
ஒரு காலை மாற்றி இந்த
அடியவன் தலை மீது சற்றே
வைத்திடுவாய்..
திருச்சிற்றம்பலம் !!!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
29.04.18
No comments:
Post a Comment