Search This Blog

Saturday, May 12, 2018

குழந்தை

குழந்தை

கள்ளமில்லாத
குழந்தை ஆகனும்
கபடு சூதில்லாத
குழந்தை ஆகனும்..

காமம் கொள்ளாத
குழந்தை ஆகனும்
கர்வம் வாராத
குழந்தை ஆகனும்..

பொறாமையற்ற
குழந்தை ஆகனும்
பொய்யுரைக்காத
குழந்தை ஆகனும்..

அன்புக்கு ஏங்கும்
குழந்தை ஆகனும்
அழுது தீர்த்திடும்
குழந்தை ஆகனும்..

பணத்தை சேர்க்காத
குழந்தை ஆகனும்
பாசத்தை மறுக்காத
குழந்தை ஆகனும்..

வயது ஏறிலும்
குழந்தை ஆகனும்
வாழ்க்கை முழுமையும்
குழந்தை ஆகனும்..

கவலையை மறக்க
குழந்தை ஆகனும்
குவலய அமைதிக்கு
குழந்தை ஆகனும்..

கவிஞரின் பாடல் வரிகளில்;

******************************
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும்
மனத்தால் ஒன்று..

பிறந்து வந்த போது
நெஞ்சம் திறந்திருந்தது
அந்தப் பிள்ளையோடு
தெய்வம் வந்து குடியிருந்தது..

வயது வந்த பிறகு
நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம்
கொஞ்சம் விலகிச் சென்றது..

பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார், அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்..

கள்ளமில்லா உள்ளத்தினால்
பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண்ணெதிரே
காணுகின்ற தெய்வங்களானார்..

********************************

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
12.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...