Search This Blog

Thursday, May 10, 2018

ஜடா விநாயகா

ஜடா விநாயகா

கும்மென்று கொலுவிருக்கும்
கணபதியை தரிசிக்க நாம்
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

ஜம்மென்று வீற்றிருக்கும்
ஜடா விநாயகரைக் காண
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

அழகான ஆனைமுகனை
அகங்குளிர காணவே நாம்
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

பிரம்மாண்டமாய் அமர்ந்திருக்கும்
பெரிய பிள்ளையாரைப் பார்க்க
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

தில்லையின் வடமேற்கில்
கோவில் கொண்டவனை காண
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

கிழக்கு முகமாய் வீற்றிருக்கும்
கணபதியைப் பணிந்திடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

சாதி மதம் மொழி பேதம்
பார்க்காது கும்பிடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

சகோதரத்துவமாய் அவன்
சன்னதியில் வழிபடவே
குருவைய்யர் அக்ரஹாரம்
போக வேண்டும்..

ஸ்ரீ சபாபதியை சேவிக்க
சிதம்பரத்திற்கு வாருங்கள்
ஆனைமுகனை ஆராதிக்க
அக்ரஹாரத்தினை நாடுங்கள்..

ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன் சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...