Search This Blog

Sunday, May 13, 2018

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

தவம் புரிந்திட
தேவையில்லை
தனியாய் பூசிக்க
வேண்டியதில்லை..

தாயின் காலடி
மண்ணை எடுத்து
திருநீரென்று நாம்
இட்டுக் கொள்வோம்..

வேண்டிய செல்வமும்
வரமாய்க் கிட்டும்
தெய்வத்தின் அருளும்
தானாய் அமையும்..

எழும் போதும் கீழே
விழும் போதும் வாயில்
வரும் வார்த்தை அதுவே
அம்மா ஆகும்..

அம்மா பிள்ளை என
கூறிக் கொள்வதில்
ஆண்களுக்கு எப்பவும்
ஆயிரம் சந்தோஷம்..

தாயும் தாரமும்
இணங்கி இருந்திட
புண்ணியம் பலவும்
செய்திடல் வேணும்..

உதரத்தில் சுமந்து நமை
உலகிற்கு தந்தவளை
உயிர் உள்ளவரையிலும்
உடனிருந்து காப்போம்..

மாயக் கண்ணனும்
மண்டியிட்டு கிடந்தது
மாதா யசோதையின்
மடியினில் தானே..

ஆதிசங்கரரும் கூட
ஆர்யாம்பிகையை
அக்கினியில் இடவே
காலடிக்கு திரும்பினார்..

அம்மா என்று நாம்
அன்போடு கூறுவது
ஓம் என ஓராயிரம் முறை
கூறுவது போலாகும்..

அன்னையை போற்றுவோம்
அன்பினை பரப்புவோம்..

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...