Search This Blog

Sunday, May 13, 2018

ராஜாவின் இசை

ராஜாவின் இசை

நீண்டதொரு பயணத்தில்
வாகனத்தை ஓட்டுகையில்
தூக்கம் தழுவாத கண்கள்
வேண்டும்..

அலுவலகத்து அலைச்சலிலே
அயர்ந்துறங்க இரவினிலே
அமைதியான மனமும் இருக்க
வேண்டும்..

குடும்பத்து சிக்கலிலே
குழப்பத்தின் நடுவினிலே
கவலை மறந்திட நல்மனமும்
வேண்டும்..

எங்கே கிட்டும் இவையெல்லாம்
எவரிடம் கிட்டும் இவையெல்லாம்
எப்படி கிட்டும் இவையெல்லாம்
எதனால் கிட்டும் இவையெல்லாம்

ராஜாவின் இசையை
ரசித்துப் பாருங்கள்
ரம்மியமான சூழலை
உணர்ந்து பாருங்கள்..

களைப்பு தீர்ந்திடவும்
அலுப்பு மறைந்திடவும்
துடிப்பு ஓங்கிடவும் நல்
மருந்து இசையாகும்..

கண்ணை மூடி சற்றே
கணநேரம் கேட்டாலும்
காதின் உள்நுழைந்து
கவலை போகச் செய்யும்..

ஆயிரமாயிரம் பாடல்கள்
அவையும் அல்வா துண்டுகள்
ஆழமாய் மனதில் இறங்கி
ஆத்மாவை குளிர்ச் செய்திடும்..

இசையின் மூலமாக
இரத்த அழுத்தத்தை
இருதய ஓட்டத்தை
இயக்கும் ராஜன் அவன்..

இரைச்சலின் நடுவினில்
இசை வரும் வேளையில்
இன்னிசை கொடுக்கும்
இறைவன் ஆவான்..

சரிகமபதநி யை
சாதி மதம் கடந்து
சாமானியருக்கும்
சேர்த்தவராம்..

நாத்திகம் பேசும்
நரிகளின் நடுவே
ஆத்திகம் போற்றும்
அண்ணல் அவர்..

பழுத்த மரமான
பண்ணைபுரம்
பக்தி மணம் கமழும்
திண்ணைப்புரம்..

தேனமுத இசையினை
தந்து வந்த கரங்களால்
தெய்வீக இசையும் கூட
தர இயலும்..

திருவாசகம் நமக்கு தந்த
தெய்வம் இன்று நாலாயிர
திவ்யப்பிரபந்தமும் விரைவில்
தரவுள்ளது..

நோய் நொடியில்லாமல்
நூறாண்டு வாழ்ந்திட
ரமணரும் சங்கரரும்
அருள் புரிக..

இசைஞானியே
இன்னிசை கேணியே
இன்னும் பல பிறப்பு நீர்
எடுக்க வேண்டும்..

எங்கள் செவிகளுக்கு
என்றும் இனிய நல்
இசையினை வாரி
வழங்க வேண்டும்..

தமது கோடானு கோடி
ரசிகர்களில் ஒருவனாக....

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...