Search This Blog

Tuesday, May 15, 2018

பாலகுமாரன்

பாலகுமாரன்

தமிழ் இலக்கிய உலகில்
சுஜாதாவும் பாலகுமாரனும்
தொட்ட உயரங்களை எளிதில்
சொல்ல மாளாது..

எழுத்துத் துறையிலும்
திரைத்துறையிலும் தம்
வார்த்தைகளை வடித்து
வானளவு உயர்ந்தவர்கள்..

எண்பதுகளில் பிரயாணத்தில்
இவர்களது படைப்பேடு இலாத
யாத்திரிகர்கள் எவரும் தமிழகத்தில்
இல்லை எனலாம்..

உணர்வுகளை உணர்ச்சியோடு
படைப்பினில் வார்த்தெடுத்து
உள்ளத்தைக் கொள்ளை கொல்லும்
ஒப்பற்ற மனிதர் இவர்..

பல புதிய எழுத்தாளர்களுக்கு
பயிற்சி அளிக்கும் பெட்டகமாய்
புத்தகங்கள் ஒவ்வொன்றையும்
முத்தாகப் பதித்தவர்..

சீரியல் பார்த்து இன்றைய மக்கள்
சிந்தனையைத் தொலைக்கும் நேரம்
சீரியசாக அன்றைய தலைமுறையினர்
இவரது படைப்பில் லயித்திருந்தனர்..

ஆன்மீகத்தில் அதிக நாட்டமுற்று
ஆழ்ந்தெழுதிய வரிகள் யாவும்
ஆலமரமாய் தமிழுக்களித்த
அன்பளிப்பெனவே கூறலாம்..

பல்துறையிலும் பங்களித்து
படைப்பாற்றலில் பிரகாசித்து
பல்கலைக்கழகமாய் விளங்கிய
பிதாமகன் இவர்..

மோனப் புன்னகையேந்தி
மெய்மறக்கும் வரிகளையிட்டு
மக்களனைவரையும் ஈர்த்த
மாமனிதர் இவர்..

எழுபத்தி ஒன்றில் மறைந்த
எழுத்துச் சித்தரே, உமக்கு
எங்களது இதயத்தில் எவரும்
எட்டாத இடம் உண்டு..

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்..

😢😢😢😢😢😢

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
15.05.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...