பதட்டம்
பதட்டத்தில் நாமும்
பயணம் செய்திட
பாதி உயிர் போய்
மீதி உயிர் வந்திடும்..
வீட்டில் பதட்டம்
வெளியே பதட்டம்
அலுவலகத்தில் பதட்டம்
அனைத்திலும் பதட்டம்..
பதட்டத்தில் எடுக்கும்
முடிவுகள் யாவுமே
பாரமாய் என்றும்
முடிவுறாது போகும்..
வியர்வையும் நா
வறட்சியும் சேர்ந்து
உடலை வறுத்தும்
உணர்வை இறுக்கும்..
கன்னத்தில் கை வைத்து
கைவிரலை பிசைதலும்
நகங்களை கடித்தலும்
பதட்டத்தை வெளிக்காட்டும்..
மாளாத வேதனையில்
மனமும் அல்லாடும்
மகிழ்ச்சி இல்லாமலே
மூளை செயலிழக்கும்..
தாமதிப்பதை தவிர்த்து
திட்டமிடுதலை துவக்கி
பதட்டத்தின் பயத்தினை
பந்தாடி விடலாம்..
நிதானம் என்னும்
நண்பனும் சேர்ந்திட
நிச்சயம் பதட்டத்தை
நில்லாது போக்கலாம்..
தைரியத்தை கூடவே
துணையிருத்தி நாமும்
தடுமாற்றத்தை அறவே
தகர்த்தெறியலாம்..
இயலாமையை
இல்லாது போக்க
இன்றே நம் மனதில்
இருத்தி கொள்வோம்..
குற்ற உணர்ச்சியும்
காழ்ப்புணர்ச்சியும்
பதட்டத்தை பெருக்கும்
நினைவிலே கொள்வோம்..
பதட்டமில்லா மனதும்
நடுக்கமில்லா பொழுதும்
தினந்தோறும் கிட்டிடவே
தியானமும் செய்வோம்..
பாலாவின் பதட்டத்தை
பக்கங்களில் கூற இயலாது..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.05.18
No comments:
Post a Comment