தலைநிமிர் தமிழா
எத்தனை காலம் தான்
பழம் பெருமைகளை நீ
பேசிக்கொண்டு பொழுது
கழிப்பாய் தமிழா ??
இராஜராஜ சோழனும்
கரிகால் வளவனும்
ஆற்றிய பங்கு
அளப்பறியாதது..
கம்பனும் காளமேகமும்
அவ்வையும் கூத்தரும்
தமிழில் எழுதிட்ட ஏடுகள்
படிக்க ஆயுசும் போதாது..
கட்ட பொம்மனும்
மருது பாண்டியரும்
பாளையங்கோட்டை
சிங்கங்கள்..
பாரதியும் வ.உ.சியும்
பாதி வாழ்க்கையை
சிறையில் கழித்து
பாரதம் காத்த வீரர்கள்..
அன்றைய காலத்தையே
அலசிக் கொண்டிருந்து
இன்றைய நாட்களை நீ
இழக்கின்றாய்..
அரசியல்வாதிகள்
ஆதாயம் காணவே
சாதியை முதலில்
கையாண்டனர்..
அற்பத்தனமாய்
இனம் வாரிப் பிரித்து
தமிழனை தனித்திட
முயலுகின்றார்..
பாரதத் தாயின்
ஒருதாய் மக்களை
மொழிவாரிப் பிரித்து
முடக்கச் செய்வார்..
அந்நிய கைக்கூலிகள்
திடீர் தமிழின தலைவர்கள்
அன்னை பாரதத்தை
பிரிக்க முனைகின்றனர்..
மவுசு குறைந்த சில
திரைத்துறையினரும்
கட்சிகள் துவக்கியே
குழப்பி விடுகின்றனர்..
திராவிட கட்சியின்
சூழ்ச்சியை புரிந்து
தமிழின மாயையில்
சிக்காது இரு..
வீண் பேச்சுகளை
வெட்டி புரட்டுகளை
புறந்தள்ளி விட்டு
போய்விடவும்..
நாளைய பாரதம்
நம் இளைஞர் வசமே
நயவஞ்சகர்களை நீ
எதிர்த்திடவும்..
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
துண்டு பட்டால் மாண்டு வீழ்வு
வாழ்க வளர்க !!!
ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்
💪💪💪💪💪💪💪
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.05.18
No comments:
Post a Comment