Search This Blog

Tuesday, June 19, 2018

தில்லை பெருவிழா

தில்லை பெருவிழா

அதிகாலை வேளையிலே
அதிர்வேட்டு முழங்கிடவே
அம்பலத்தை விட்டு அவன்
வருகிறான்

அம்மை சிவகாமியோடு
ஆனந்த நடனம் போட்டு
ஆடியபடி முன்னும் பின்னும்
வருகிறான்

தில்லைவாழ் அந்தணர்கள்
தீபாராதனை காட்டும் வேளை
தேஜோமயமாய் தரிசனமும்
தருகிறான்

தீட்ஷிதர்கள் தோள் கொடுக்க
தள்ளுமுள்ளு கூட்டம் நடுவில்
தேர் மீது உலா வரவே அவன்
வருகிறான்

பிட்டுக்கு மண் சுமந்த நம்
பெருமான் பிராட்டியுடன்
பிரகாரத்தை வலம் வந்து
அருள்கிறான்

மக்கள் வெள்ளத்திலே
மங்கள வாத்தியம் ஒலிக்க
மகேஸ்வர மூர்த்தி இன்று
வருகிறான்

நம் குறைகளை களையவே
நான்கு வீதியும் உலா வந்து
நடராஜ ராஜன் பவனியும்
வருகிறான்

சாயந்திர நேரத்திலே
செம்படவர் சீரும் ஏற்று
சந்தோஷமாய் தேரடிக்கு
வருகிறான்

மாலை நேர பூசை ஏற்று
மண்ணாதி மன்னன்
மீண்டும் மாடவீதியை விட்டு
வருகிறான்

அம்மையோடு அய்யனும்
அடியவர்க்கு காட்சி தந்து
ஆயிரங்கால் மண்டபத்துள்
வருகிறான்

அர்ச்சனை முடிந்த பிறகு
ஆரத்தியும் முடிந்த பிறகு
அம்பலவன் அபிஷேகம்
ஏற்கிறான்

பாலும் தேனும் இளநீருடன்
பன்னீரும் சந்தனமும் கூடி
புஷ்ப அபிஷேகமும் அவன்
ஏற்கிறான்

பஞ்சமூர்த்தி வீதி உலா
பாங்குடனே முடிந்துமே
பக்தியோடு ரகசியத்திற்கு
பூசையும் முடிவடையும்

சர்வாபரணங்கள் தரித்து
சடைமுடி மேல் வில்வத்துடன்
சபாநாயகர் சிவகாமியுடன்
சித்சபைக்கு செல்கிறான்

விண்ணதிர வேட்டு சத்தத்துடன்
வேத கோஷங்களும் முழங்க
வஞ்சியோடு ஆடியபடி அவனும்
செல்கிறான்

பக்தர்களுக்கு அருள் வழங்கிய
பத்து நாள் பிரமோற்சவமும்
பிரமாதமாக கொடியிறக்கத்துடன்
நிறைவடையும்..

நாளை 20.06 தேர்த் திருவிழா
மறுநாள் 21.06 தரிசன உற்சவம்

தில்லைக்கு செல்வோம்
திருநடனம் காண்போம்

மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு
கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட
தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு
இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட
நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட
எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ்
நடராஜனே...

"" சம்போ மகாதேவா
ஹர ஹர மகாதேவா
நடராஜா நடராஜா
சித்சபேசா சிவ சிதம்பரம் ""

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருச்சிற்றம்பலம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18

பூமாலையிட்டு பூசிப்போர் மத்தியில்
பாமாலை இட்டு பாலன் பூசிப்பான்.

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...