நடராஜா நடராஜா
கருவரையிலிருந்து
காட்சியளிக்க நீயும்
வா வா நடராஜா
கயிலை நாதனே
கனக சபை விட்டு
வா வா நடராஜா
அம்மையோடு
ஆடிக்கொண்டு
வா வா நடராஜா
ஆயுசுக்கும்
ஆராதிப்போம்
வா வா நடராஜா
அடியவர்க்கு
அருளிடவே
வா வா நடராஜா
அம்பலத்தை
விட்டு நீயும்
வா வா நடராஜா
வடம் பிடித்து
இழுக்கிறோம்
வா வா நடராஜா
வீதி வலமும்
புரிந்திடவே
வா வா நடராஜா
சிதம்பரத்து
நகரத்திலே
வா வா நடராஜா
செழுமையாக
வாழ்வும் இனிக்க
வா வா நடராஜா
சிவகாமசுந்தரி சமேத
சித்சபேச மூர்த்திகி ஜெய்..
* இன்று சிதம்பரத்தில் ரதோத்சவம் 💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
20.06.18
No comments:
Post a Comment