Search This Blog

Wednesday, June 20, 2018

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

அம்பலத்தில் ஆடுகின்ற
ஆனந்த தாண்டவமே
அடியாரை ஆட்கொள்ளும்
அகிலாண்ட கோடி நாயகா..

மூலவரே உற்சவராகி
தேர் மீது உலாவும் வந்து
தொண்டர்க்கு அருளுவது
தில்லையம்பதியிலே தான்..

ஆனி உத்திரத்தில்
ஆருத்ரா மார்கழியில்
அகங்குளிற தரிசனமும்
தந்து ஆட்கொள்கிறாய்..

ராஜாதி ராஜனாக
வீதி வலமும் வந்து
பக்தர்களுக்கு நீயும்
அருளிச் செல்கிறாய்..

குறைகளை கேட்டறிந்து
கருணையோடு காத்திட
கனகசபையுள் மீண்டும்
எழுந்தருளி விடுவாய்..

இன்னும் ஆறு மாதம்
ஆகிவிடுமே அய்யனே
உன்னை நாங்கள்
அருகினில் தரிசிக்க..

அம்மை சிவகாமியே
ஆலகால விடமுண்ட நேரம்
அருட்கரத்தால் இறுக்கி
காத்தவளும் நீயே..

ஆடிக் களைத்த ஈசனை
அருகில் இருந்து நீயும்
அனுதினமும் சபையுள்
காப்பவளும் நீயே..

எத்துனை முறை தரிசித்தாலும்
ஏக்கம் கொண்டு தொழுகின்றோம்
எழு பிறப்பபெடுத்தாலும் ஐயனே
உனை தரிக்கும் பேறு வேண்டுமய்யா..

" பக்தனாய் பாடமாட்டேன்
பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத்த்தில் ஆடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியேனேன் வந்தவாறே "

------- அப்பர் ஸ்வாமிகள் -------

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏

நடராஜா சித்சபேசா சிவ சிதம்பரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.06.18

No comments:

Post a Comment

Most Viewed

என் படைப்புக்களில் சிறந்ததாக கருதுவது

நடராஜர் கவிதைகள்

எனது தகப்பனார் ஸ்வர்கீய           ஸ்ரீமான் ஆர் வெங்கட்ராமன், ஹிந்தி பண்டிட் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பிக்கிறேன். அன்பன், ஆர...